search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தற்கொலை"

    • நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.

    இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

    இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
    • சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வாலிபர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28). கடந்த ஓராண்டுக்கு முன்பு பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்த பகவதி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

    பகவதி கர்ப்பம் அடைந்த நிலையில் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் அருணாச்சலத்தின் தொழில் ரீதியாக அவரது மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாக கூறி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது மனைவி குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அருணாச்சலம் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.
    • வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

    வேலூர்:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் வழியாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வந்தபோது எஸ்-8 பெட்டியில் இருந்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவர் கழிவறையை உட்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாக கழிவறை பூட்டப்பட்டிருந்ததால் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்கள் கதவைத் தட்டி உள்ளே யார் இருக்கிறார்கள் என சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

    அதற்குள் ரெயில் காட்பாடி வந்தது. அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் இது குறித்து தெரிவித்தனர். போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் ஏறி கழிவறை கதவை உடைத்தனர்.

    அங்கு வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் கயிறால் தூக்கட்டு இறந்து கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த வாலிபர் சந்திரஜித் என்பதும் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

    வாலிபர் பெங்களுருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியில் 15 நிமிடத்திற்கு மேல் நின்றது. ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • விருதுநகர் அருகே காதல் தோல்வியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • பெண் தரமறுத்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் ஏ.டி.புது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது சகோதரர் ஜான்பிரதீப் (வயது 20). பட்டப்படிப்பை பாதியி லேயே நிறுத்தி விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பெற்றோர் இல்லாததால் சகோதரர்கள் தாத்தா பராமரிப்பில் இருந்தனர்.

    இந்த நிலையில் ஜான் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரை சந்தித்த ஜான்பிரதீப் திருமணத்துக்கு பெண் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பெண் தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஜான்பிரதீப் கடும் மனஉளைச்சலில் இருந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜான்பிரதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சகோதரர் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார்.
    • இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்துராஜ். இவரது மகன் ரமேஷ் (29), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தாார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
    • வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் மகன் காளிதாஸ் (வயது25). கூலித்தொழிலாளி. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த பாண்டிபிரியா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த பாண்டிபிரியாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தீபாவளி விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க காளிதாஸ் வத்தலக்குண்டு வந்தார். அப்போது தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விஜய் பாண்டி என்பவரது மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
    • வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார்.

    சேலம்:

    சேலம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் விஜய் (20).

    இவர் அந்த பகுதியில் உள்ள பாண்டி என்பவரது மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நாமக்கல்லில் தனியாக கடை வைக்க முடிவு செய்த விஜய் வேலையை விட்டுவிட்டு 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு சென்றார்.

    இதையடுத்து விஜயை தொடர்பு கொண்ட பாண்டி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏன் வேலையை விட்டு சென்றாய்? எங்கள் கடையிலேயே வேலை பார்த்திருக்கலாமே என்று கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் பாண்டியின் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை செல்போனில் பதிவு செய்த பாண்டி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து நேற்று இரவு விசாரணை நடத்தினர்.

    இரவு 11 மணி ஆகிவிட்டதால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர்.

    இதையடுத்து வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார். பின்னர் அங்கு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறை கதவை தட்டியும் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.

    சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். விஜய்யை இன்றும் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்ததால் பயந்து போய் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்றதால் சிரஞ்சீவி குடிப்பழத்துக்கு அடிமையானார்.
    • சிரஞ்சீவி வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கடித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காட்டம் வாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 35). இவருடைய மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இதனால் இவருடைய மனைவி வீட்டை விட்டு வெளியேறி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் சிரஞ்சீவி குடிப்பழத்துக்கு அடிமையானார். நேற்று மதுபோதையில் இருந்த சிரஞ்சீவி வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கடித்தார். அது வெடித்து சிதறியது. இதில் சிரஞ்சீவி முகம் சிதைந்தது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து பங்காரு பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிரஞ்சீவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வாலிபரின் இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடம்பத்தூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் டோமனிக்(வயது28). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் இரவு கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் பகுதிக்கு வந்தார். திடீரென அவர் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரேவந்த் டோமனிக்கின் இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமணமாகாத மனவேதனையில் இருந்த வாலிபர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி சேரன்நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி(31). வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமண மாகவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த பாண்டி தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தாடி க்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனையடைந்த நினிஷ் நேற்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்
    • களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராகவன். கூலி தொழிலாளி. இவரது மகன் நினிஷ் (வயது 24). படிப்பு முடிந்து விட்டு இப்போது கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித்தி ரிந்ததால் பெற்றோர் இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நண்பர்களுடன் சுற்றி திரியாமல் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த நினிஷ் நேற்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் தனது அறையில் சென்று கதவை சாத்தி விட்டு தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது சகோதரர் அண்ணன் நிஷாந்த் அறையில் சென்று பார்த்த போது நினிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நினிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×